search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சித்தால் ரத்த ஆறு ஓடும்- சித்தராமையா

    அரசியல் சாசனத்தை மாற்ற சிலர் முயற்சி செய்கிறார்கள். அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சி செய்தால் ரத்த ஆறு ஓடும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக தலித் மற்றும் பழங்குடியின ஒப்பந்ததாரர்கள் சங்க மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சமத்துவத்தை ஏற்படுத்த இட ஒதுக்கீடு வழங்குவது தீர்வு அல்ல. ஆனால் இது ஒரு வழி. நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தரமான கல்வி, இயற்கை வளங்கள் கிடைக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடைய அனைவரும் பாடுபட வேண்டும்.

    அரசியல் சாசனம் இல்லாமல் இருந்திருந்தால் நான் முதல்-மந்திரி ஆகியிருக்க முடியாது. மோடியும் பிரதமர் பதவிக்கு வந்திருக்க முடியாது. அரசியல் சாசனத்தை மாற்ற சிலர் முயற்சி செய்கிறார்கள். அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சி செய்தால் ரத்த ஆறு ஓடும்.

    இவ்வாறு சித்தராமையா பேசினார்.
    Next Story
    ×