என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மெகபூபா கருத்து
Byமாலை மலர்29 Jun 2019 11:32 PM GMT (Updated: 29 Jun 2019 11:32 PM GMT)
சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது குறித்து மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:
இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் இங்கிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது. அப்போது, வழக்கமான நீல நிற சீருடைக்கு பதிலாக, ஆரஞ்சு நிற சீருடை அணியும் என்று இணையத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, கிரிக்கெட் அணியை காவிமயமாக்கும் முயற்சி என்று சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சென்னை தண்ணீர் பிரச்சினையை சுட்டிக்காட்டி இதுகுறித்து காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கூறியதாவது:-
சர்வதேச தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்து வருகிறது. அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். சென்னை நகரில், கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், நாம் கிரிக்கெட் அணியின் சீருடை நிறம் விஷயத்தில் நமது ஆற்றலை செலவிட்டு வருகிறோம். தவறான பிரச்சினைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுத்து பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X