என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த குறைபாடும் இல்லை - மத்திய மந்திரி தகவல்
Byமாலை மலர்27 Jun 2019 10:15 PM GMT (Updated: 27 Jun 2019 10:15 PM GMT)
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உற்பத்தி செய்ததில் எந்த குறைபாடும் இல்லை என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளதாக மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் ஒரு துணை கேள்வி எழுப்பினார். சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்பாடு குறித்தும், வாக்கு எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் மற்றும் விவிபாட் கருவியில் உள்ள சீட்டுகளுக்கும் வித்தியாசம் இருந்ததாகவும் பல புகார்கள் வந்ததே? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், “இது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உற்பத்தி தொடர்பான கேள்வி, அதன் செயல்பாடு பற்றி அல்ல. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உற்பத்தி செய்ததில் எந்த குறைபாடும் இல்லை என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. ஏதாவது குறிப்பிட்ட புகார் இருந்தால், நான் அதற்கு தேர்தல் கமிஷனிடம் இருந்து தகவல் கேட்டு சொல்கிறேன்.
விவிபாட் கருவிகளின் சீட்டுகள் மற்றும் ஓட்டுகள் எண்ணிக்கை தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. இதுபற்றி புகார் வந்த சில இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அந்த இடத்திலேயே வேட்பாளர்கள் முன்னிலையில் அந்த தவறுகளை கண்காணித்து சரிசெய்தனர்” என்றார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் ஒரு துணை கேள்வி எழுப்பினார். சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்பாடு குறித்தும், வாக்கு எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் மற்றும் விவிபாட் கருவியில் உள்ள சீட்டுகளுக்கும் வித்தியாசம் இருந்ததாகவும் பல புகார்கள் வந்ததே? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், “இது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உற்பத்தி தொடர்பான கேள்வி, அதன் செயல்பாடு பற்றி அல்ல. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உற்பத்தி செய்ததில் எந்த குறைபாடும் இல்லை என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. ஏதாவது குறிப்பிட்ட புகார் இருந்தால், நான் அதற்கு தேர்தல் கமிஷனிடம் இருந்து தகவல் கேட்டு சொல்கிறேன்.
விவிபாட் கருவிகளின் சீட்டுகள் மற்றும் ஓட்டுகள் எண்ணிக்கை தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. இதுபற்றி புகார் வந்த சில இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அந்த இடத்திலேயே வேட்பாளர்கள் முன்னிலையில் அந்த தவறுகளை கண்காணித்து சரிசெய்தனர்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X