என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய கல்விக் கொள்கை வரைவு- பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு
Byமாலை மலர்27 Jun 2019 10:26 AM GMT (Updated: 27 Jun 2019 10:26 AM GMT)
தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.
புதுடெல்லி:
புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சமர்ப்பித்த தேசிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என தெரிவித்திருந்தது. இதற்கான அவகாசம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களைவியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்தார். அப்போது, தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்களை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படும் என்றும், ஜூலை 31-ம் தேதி வரை கருத்துக்களை பதிவு செய்யலாம் என்றும் கூறினார்.
அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசனை செய்தபிறகே, தேசிய கல்விக் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ரமேஷ் பொக்ரியால், ‘2009ம் ஆண்டில் இருந்தே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது, ஆனால், 2014க்கு பிறகுதான் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X