என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைத்து நாணயங்களும் செல்லும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Byமாலை மலர்27 Jun 2019 2:07 AM GMT (Updated: 27 Jun 2019 2:07 AM GMT)
புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மும்பை :
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப பொருளாதாரம், சமூகம், கலாசாரம் போன்ற பல்வேறு கருப்பொருளை மையமாக வைத்து நாணயங்கள் வெளியிடப்படுகிறது. நாணயங்கள் நீண்டகாலமாக புழக்கத்தில் இருக்கும்.
அதேநேரத்தில் பல புதிய வடிவங்களில், புதிய உருவங்களிலும் வெளியிடப்படும். இதில் நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்ட நாணயங்களின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் கிளப்பப்படுகிறது. இதனால் சில வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள் அந்த குறிப்பிட்ட நாணயங்களை வாங்க மறுப்பதாக தெரிகிறது.
பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம். அதேபோல அனைத்து வங்கிகளும் நாணயங்களை மாற்றுவதற்கு வரும் பொதுமக்களை திருப்பி அனுப்ப வேண்டாம்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப பொருளாதாரம், சமூகம், கலாசாரம் போன்ற பல்வேறு கருப்பொருளை மையமாக வைத்து நாணயங்கள் வெளியிடப்படுகிறது. நாணயங்கள் நீண்டகாலமாக புழக்கத்தில் இருக்கும்.
அதேநேரத்தில் பல புதிய வடிவங்களில், புதிய உருவங்களிலும் வெளியிடப்படும். இதில் நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்ட நாணயங்களின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் கிளப்பப்படுகிறது. இதனால் சில வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள் அந்த குறிப்பிட்ட நாணயங்களை வாங்க மறுப்பதாக தெரிகிறது.
பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம். அதேபோல அனைத்து வங்கிகளும் நாணயங்களை மாற்றுவதற்கு வரும் பொதுமக்களை திருப்பி அனுப்ப வேண்டாம்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X