என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமர்நாத் யாத்திரை முன்னேற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆய்வு
Byமாலை மலர்26 Jun 2019 11:52 AM GMT (Updated: 26 Jun 2019 11:52 AM GMT)
அமர்நாத் யாத்திரை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்குடன் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.
ஸ்ரீநகர்:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் வந்தடைந்தார்.
இந்த பயணத்தின் ஒருகட்டமாக, அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் பங்கேற்றனர். அவர்களுடன் உள்துறை மந்திரி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கைவுபாவும் பங்கேற்றுள்ளார்.
உள்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு அமித்ஷா காஷ்மீர் மாநிலத்திற்கு வந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X