என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பெண்ணை கற்பழித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் - ‘பேஸ்-புக்’ மூலம் தற்கொலை மிரட்டல்
Byமாலை மலர்26 Jun 2019 9:22 AM GMT (Updated: 26 Jun 2019 9:22 AM GMT)
திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு எதிராக பேஸ்புக் மூலம் அந்த பெண் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுமேஷ்லால்.
இவர் மீது திருவனந்தபுரம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேஸ்-புக்கில் பரபரப்பு குற்றம் சுமத்தி பதிவிட்டிருந்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமேஷ்லால் அந்த பெண்ணிடம் பேஸ்-புக் மூலம் நட்பாக பழகி உள்ளார்.
அதன் பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி உள்ளார். அந்த பெண், தான் ஏற்கனவே திருமணமாகி கணவரை விவாகரத்து செய்தவர் என்பதை தெரிவித்துள்ளார். ஆனாலும் தனது முடிவில் சுமேஷ்லால் உறுதியாக இருந்ததால் அந்த பெண்ணும் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.
இதை தொடர்ந்து அந்த பெண்ணை ஓட்டல்கள், சுற்றுலா தலங்கள் என்று பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்ற சுமேஷ் லால் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் வற்புறுத்தியதால் அவருடன் தொடர்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன்னை சுமேஷ்லால் ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பேஸ்-புக்கில் பதிவிட்டார்.
மேலும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் போட்டோவையும் பேஸ்-புக்கில் வெளியிட்டார். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து அவர்கள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர், எழுத்து மூலம் புகார் தெரிவித்ததால் இந்த கற்பழிப்பு புகார் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுமேஷ்லால்.
இவர் மீது திருவனந்தபுரம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேஸ்-புக்கில் பரபரப்பு குற்றம் சுமத்தி பதிவிட்டிருந்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமேஷ்லால் அந்த பெண்ணிடம் பேஸ்-புக் மூலம் நட்பாக பழகி உள்ளார்.
அதன் பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி உள்ளார். அந்த பெண், தான் ஏற்கனவே திருமணமாகி கணவரை விவாகரத்து செய்தவர் என்பதை தெரிவித்துள்ளார். ஆனாலும் தனது முடிவில் சுமேஷ்லால் உறுதியாக இருந்ததால் அந்த பெண்ணும் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.
இதை தொடர்ந்து அந்த பெண்ணை ஓட்டல்கள், சுற்றுலா தலங்கள் என்று பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்ற சுமேஷ் லால் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் வற்புறுத்தியதால் அவருடன் தொடர்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன்னை சுமேஷ்லால் ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பேஸ்-புக்கில் பதிவிட்டார்.
மேலும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் போட்டோவையும் பேஸ்-புக்கில் வெளியிட்டார். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து அவர்கள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர், எழுத்து மூலம் புகார் தெரிவித்ததால் இந்த கற்பழிப்பு புகார் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X