என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது
Byமாலை மலர்26 Jun 2019 4:32 AM GMT (Updated: 26 Jun 2019 4:32 AM GMT)
டெல்லியில் நண்பனின் மனைவியை திருமணம் செய்வதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி ஜாகிரா அருகே ரெயில்வே டிராக்கில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த நபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தண்டவாளத்தில் அவர் இறந்து கிடப்பதாக தகவல் அளித்த குல்கேஷ் என்பவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, திடுக்கிடும் தகவல் வெளியானது.
இறந்து கிடந்தவர் குல்கேஷின் நண்பர் தல்பீர் (வயது 30) என்பதும், நண்பன் என்றும் பாராமல் அவரை குல்கேஷ் தாக்கி சுயநினைவற்ற நிலையில் தண்டவாளத்தில் போட்டதும் தெரியவந்தது. இதையடுத்து குல்கேசை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொலை செய்யப்பட்ட தல்பீரின் மனைவிக்கும், குல்கேசுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. அந்தப் பெண்ணை நண்பரிடம் இருந்து பிரித்து திருமணம் செய்துகொள்ள குல்கேஷ் விரும்பினார். ஆனால் அந்தப் பெண் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை.
எனவே தல்பீரை தீர்த்துக் கட்டிவிட்டு அவர் மனைவியை திருமணம் செய்துகொள்ள சதித் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி தல்பீரை தனியாக அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி, தண்டவாளத்தில் போட்டுள்ளார். பின்னர் ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த கொலையில் தல்பீரின் மனைவியோ அல்லது வேறு நபர்களோ சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X