என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகளை வீழ்த்தி உள்ளோம்- மத்திய அரசு தகவல்
Byமாலை மலர்25 Jun 2019 10:08 AM GMT (Updated: 25 Jun 2019 10:08 AM GMT)
ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 700க்கும் மேற்பட்ட பங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 113 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 257 பேரும், 2017ம் ஆண்டில் 213 பேரும், 2016ல் 150 பேரும் கொல்லப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிஷன் ரெட்டி
பயங்கரவாத விஷயத்தில் சிறு தவறையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக, பயங்கரவாதிகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்க முயற்சிக்கும் நபர்களை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் மீதான நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X