என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.பி.க்களின் கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு
Byமாலை மலர்24 Jun 2019 11:15 AM GMT (Updated: 24 Jun 2019 11:15 AM GMT)
பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் நோய்க்கு 130 பேர் உயிரிழந்தது தொடர்பான பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.கே.ராகேஷ் எழுப்பினார்.
இதுபோன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் தொடர்பாக பதிலளிக்க மத்திய மந்திரிகள் முன்வராதது தொடர்பாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதை கவனித்த துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு ‘உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் 30 நாட்களுக்குள் பதிலளித்தாக வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.
சில முக்கிய பிரச்சனை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், சுற்றிவளைத்து நீண்ட நெடிய விளக்கங்கள் அளிப்பது, எதிர்வாதங்களில் ஈடுபடுவது போன்ற செயல்கள் ஏற்புடையதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் நோய்க்கு 130 பேர் உயிரிழந்தது தொடர்பான பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.கே.ராகேஷ் எழுப்பினார்.
இதுபோன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் தொடர்பாக பதிலளிக்க மத்திய மந்திரிகள் முன்வராதது தொடர்பாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதை கவனித்த துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு ‘உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் 30 நாட்களுக்குள் பதிலளித்தாக வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.
சில முக்கிய பிரச்சனை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், சுற்றிவளைத்து நீண்ட நெடிய விளக்கங்கள் அளிப்பது, எதிர்வாதங்களில் ஈடுபடுவது போன்ற செயல்கள் ஏற்புடையதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X