என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு - பாராளுமன்றத்தில் விவாதிக்க துணை ஜனாதிபதி அறிவுறுத்தல்
Byமாலை மலர்24 Jun 2019 9:14 AM GMT (Updated: 24 Jun 2019 9:14 AM GMT)
நாட்டின் பல மாநிலங்களில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாட்டை முக்கிய பிரச்சனையாக முன்வைத்து பாராளுமன்றத்தில் தனி விவாதம் நடத்த துணை ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் பேசினர்.
குறிப்பாக, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குடிநீருக்காக மக்கள் திண்டாடி வரும் அவலநிலை தொடர்பாக பாஜக எம்.பி, சத்யநாராயணன் ஜாட்டியா வேதனை தெரிவித்தார்.
குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண விரைவான, தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இவற்றை எல்லாம் கவனித்த மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு, ‘நாடு முழுவதும் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இதுபற்றி தனியாக விவாதிக்கப்பட வேண்டும்.
இதற்காக அனுமதி கோரி உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்தால் தனி விவாதம் நடத்துவதற்கு அனுமதியளிக்க நான் தயாராக இருக்கிறேன்’ என உறுதியளித்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாராளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு இன்று காலை நோட்டீஸ் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் பேசினர்.
குறிப்பாக, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குடிநீருக்காக மக்கள் திண்டாடி வரும் அவலநிலை தொடர்பாக பாஜக எம்.பி, சத்யநாராயணன் ஜாட்டியா வேதனை தெரிவித்தார்.
குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண விரைவான, தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதே விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய மேலும் சில பாஜக எம்.பி.க்கள், மழை நீரை சேமிப்பது, தண்ணீரை சிக்கனமாக கையாள்வது தொடர்பாக மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டனர். நீர் மேலாண்மைக்காக ‘ஜல் சக்தி’ என்னும் தனி அமைச்சகத்தை உருவாக்கிய பிரதமர் மோடிக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இவற்றை எல்லாம் கவனித்த மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு, ‘நாடு முழுவதும் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இதுபற்றி தனியாக விவாதிக்கப்பட வேண்டும்.
இதற்காக அனுமதி கோரி உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்தால் தனி விவாதம் நடத்துவதற்கு அனுமதியளிக்க நான் தயாராக இருக்கிறேன்’ என உறுதியளித்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாராளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு இன்று காலை நோட்டீஸ் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X