என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை - பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்
Byமாலை மலர்24 Jun 2019 6:01 AM GMT (Updated: 24 Jun 2019 6:01 AM GMT)
வாக்குச்சீட்டு முறை மூலம் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பழைய நடைமுறையின்படி வாக்குச்சீட்டு முறை மூலம் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
தற்கால நடைமுறைகளுக்கு இந்த முறை சாத்தியப்படாது என தேர்தல் கமிஷன் இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.
இந்நிலையில், வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயருக்கு நேராக முத்திரை பதிக்கும் முறை மூலம் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்னர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பழைய நடைமுறையின்படி வாக்குச்சீட்டு முறை மூலம் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
தற்கால நடைமுறைகளுக்கு இந்த முறை சாத்தியப்படாது என தேர்தல் கமிஷன் இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.
வாக்கு எண்ணிக்கையின்போது குறைந்தபட்சம் 50 சதவீதம் வாக்குச்சாவடிகளில் வி.வி.பாட் எனப்படும் ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயருக்கு நேராக முத்திரை பதிக்கும் முறை மூலம் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்னர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X