என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியர்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு உரிமை இல்லை
Byமாலை மலர்23 Jun 2019 7:47 PM GMT (Updated: 23 Jun 2019 7:47 PM GMT)
இந்தியர்களை பற்றியோ, அரசியல் சட்டரீதியாக பாதுகாக்கப்பட்ட அவர்களது உரிமைகள் குறித்தோ கருத்து கூறுவதற்கு எந்த வெளிநாட்டு அரசுகளுக்கோ உரிமை இல்லை இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த 21-ந் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “கடந்த ஆண்டு முழுவதும், இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதாக எழுந்த வதந்தியின்பேரில், சிறுபான்மையினர் மீது இந்து குழுக்கள் நடத்திய கும்பல் தாக்குதல் தொடர்ந்தது” என்று கூறப்பட்டு இருந்தது.
இதற்கு பா.ஜனதா தரப்பில் ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:-
இந்தியா மதச்சார்பற்ற தன்மை கொண்ட, பன்முகத்தன்மை கொண்ட மாபெரும் ஜனநாயக நாடு. சிறுபான்மையினர் உள்பட அனைவரின் அடிப்படை உரிமைகளும் அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மத சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியா பெருமைப்படுகிறது. எனவே, இந்தியர்களை பற்றியோ, அரசியல் சட்டரீதியாக பாதுகாக்கப்பட்ட அவர்களது உரிமைகள் குறித்தோ கருத்து கூறுவதற்கு எந்த வெளிநாட்டு அமைப்புகளுக்கோ, வெளிநாட்டு அரசுகளுக்கோ உரிமை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக்கேல் பாம்பியோ, 3 நாள் பயணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) இந்தியா வரும்நிலையில், மத்திய அரசு இந்த கருத்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த 21-ந் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “கடந்த ஆண்டு முழுவதும், இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதாக எழுந்த வதந்தியின்பேரில், சிறுபான்மையினர் மீது இந்து குழுக்கள் நடத்திய கும்பல் தாக்குதல் தொடர்ந்தது” என்று கூறப்பட்டு இருந்தது.
இதற்கு பா.ஜனதா தரப்பில் ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:-
இந்தியா மதச்சார்பற்ற தன்மை கொண்ட, பன்முகத்தன்மை கொண்ட மாபெரும் ஜனநாயக நாடு. சிறுபான்மையினர் உள்பட அனைவரின் அடிப்படை உரிமைகளும் அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மத சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியா பெருமைப்படுகிறது. எனவே, இந்தியர்களை பற்றியோ, அரசியல் சட்டரீதியாக பாதுகாக்கப்பட்ட அவர்களது உரிமைகள் குறித்தோ கருத்து கூறுவதற்கு எந்த வெளிநாட்டு அமைப்புகளுக்கோ, வெளிநாட்டு அரசுகளுக்கோ உரிமை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக்கேல் பாம்பியோ, 3 நாள் பயணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) இந்தியா வரும்நிலையில், மத்திய அரசு இந்த கருத்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X