என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்ட் பனிமலையில் கடந்த மாதம் காணாமல் போனவர்களில் 7 பேர் பிரேதங்களாக மீட்பு
Byமாலை மலர்23 Jun 2019 2:18 PM GMT (Updated: 23 Jun 2019 2:18 PM GMT)
உத்தரகாண்டில் உள்ள நந்தா தேவி சிகரத்திற்கு கடந்த மாதம் மலை ஏற்றம் சென்று காணாமல் போனவர்களில் 7 பேர் பிரேதங்களாக இன்று மீட்கப்பட்டனர்.
டேராடூன்:-
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள 17,800 அடி உயரமுள்ள நந்தா தேவி சிகரத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 7 மலையேற்ற வீரர்கள் சென்றனர். அவர்களுடன் பயிற்சி நிறுவன அதிகாரி ஒருவரும் வழிகாட்டியாக சென்றிருந்தார். கடந்த மாதம் 13-ந்தேதி முன்சியாரி பகுதியில் இருந்து மலை ஏற்றம் சென்ற அவர்கள் திடீரென மாயமாகினர்.
இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீசார் ஆகியோர் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், 7 மலையேற்ற வீரர்களின் பிரேதங்களை இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீசார் இன்று மீட்டனர். ஒரு மாதத்திற்கு பிறகு அவர்களின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மற்றொருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X