என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் மனைவி, 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்றவர் கைது
Byமாலை மலர்22 Jun 2019 2:34 PM GMT (Updated: 22 Jun 2019 2:34 PM GMT)
தெற்கு டெல்லி பகுதியில் மனைவி மற்றும் 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்து துடிதுடிக்கக் கொன்றவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
புதுடெல்லி:
பீகார் மாநிலம், சம்ப்ரான் மாவட்டத்தை சேர்ந்தவர் உபேந்தர் சுக்லா(42). தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ரவுலி பகுதியில் தனியாக டியூஷன் சென்டர் நடத்தி வந்த இவர் தனது மனைவி அர்ச்சணா மற்றும் குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார்.
அதே வீட்டின் மற்றொரு அறையில் நேற்றிரவு அர்ச்சணாவின் தாயார் தங்கி இருந்தார். இன்று காலை வெகு நேரமாகியும் உபேந்தர் சுக்லாவின் படுக்கையறை கதவு திறக்கப்படாததால் அவரது மாமியார் பக்கத்து வீட்டில் உள்ள பெண்களின் உதவியுடன் கதவை உடைத்து திறந்தார்.
படுக்கை அறையினுள் கழுத்து அறுபட்ட நிலையில் அர்ச்சணா மற்றும் அவரது 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களின் அருகில் கையில் வெட்டுப்பட்டு, மயங்கிய நிலையில் உபேந்தர் சுக்லா விழுந்து கிடந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த டெல்லி போலீசார், அர்ச்சணா மற்றும் அந்த தம்பதியரின் 7 வயது மகள், 5 வயது மகன், 2 மாத பெண் குழந்தையின் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
கொலைகளுக்கான காரணம் என்ன? என்பது அந்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. எனினும், உபேந்திரா சுக்லா மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம். நேற்று பின்னிரவில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இந்த விபரீத முடிவை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பீகார் மாநிலம், சம்ப்ரான் மாவட்டத்தை சேர்ந்தவர் உபேந்தர் சுக்லா(42). தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ரவுலி பகுதியில் தனியாக டியூஷன் சென்டர் நடத்தி வந்த இவர் தனது மனைவி அர்ச்சணா மற்றும் குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார்.
அதே வீட்டின் மற்றொரு அறையில் நேற்றிரவு அர்ச்சணாவின் தாயார் தங்கி இருந்தார். இன்று காலை வெகு நேரமாகியும் உபேந்தர் சுக்லாவின் படுக்கையறை கதவு திறக்கப்படாததால் அவரது மாமியார் பக்கத்து வீட்டில் உள்ள பெண்களின் உதவியுடன் கதவை உடைத்து திறந்தார்.
படுக்கை அறையினுள் கழுத்து அறுபட்ட நிலையில் அர்ச்சணா மற்றும் அவரது 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களின் அருகில் கையில் வெட்டுப்பட்டு, மயங்கிய நிலையில் உபேந்தர் சுக்லா விழுந்து கிடந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த டெல்லி போலீசார், அர்ச்சணா மற்றும் அந்த தம்பதியரின் 7 வயது மகள், 5 வயது மகன், 2 மாத பெண் குழந்தையின் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
மனைவி மற்றும் 3 குழந்தைகளின் கழுத்தை அறுக்க உபேந்திரா சுக்லா பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்திருக்கும் போலீசார், இந்த கொலைகள் தொடர்பாக அவர் எழுதி வைத்திருந்த வாக்குமூல கடிதத்தையும் கண்டுபிடித்தனர்.
கொலைகளுக்கான காரணம் என்ன? என்பது அந்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. எனினும், உபேந்திரா சுக்லா மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம். நேற்று பின்னிரவில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இந்த விபரீத முடிவை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X