என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பனிக்கட்டியாக உறைந்த கேதர்நாத் ஏரி
Byமாலை மலர்22 Jun 2019 9:31 AM GMT (Updated: 22 Jun 2019 9:31 AM GMT)
2013-ம் ஆண்டு உருவானது போல் தற்போதும் கேதர்நாத் கோவில் அருகே இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரி பனிக்கட்டியால் உறைந்து வருகிறது.
டேராடூன்:
2013-ம் ஆண்டு வட இந்தியாவில் வெள்ள பேரழிவு ஏற்பட்டது. உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 5,748 பேர் பலியானார்கள். 4,500 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமானது.
உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் அருகே உள்ள ஏரியில் பனிக்கட்டி உறைந்து ஏற்பட்ட வெடிப்பால் இந்த வெள்ள பேரழிவு ஏற்பட்டது.
2013-ம் ஆண்டு உருவானது போல் தற்போதும் கேதர்நாத் கோவில் அருகே இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரி பனிக்கட்டியால் உறைந்து வருகிறது.
இதனால் மீண்டும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ள அபாயம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
டேராடூனில் உள்ள வாடியா இன்ஸ்டிடியூட் அமைப்பு பனிக்கட்டி உறைந்த சில படங்களை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள நிபுணர்கள் அடுத்த வாரம் அந்த இடத்தை சென்று பார்வையிடுகிறார்கள். இதை கேதர்நாத் பகுதியில் உள்ள ருத்ராபிரயாக் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் தற்போது கேதர்நாத் ஏரியில் உருவாகி இருக்கும் பனிக்கட்டி உறைவால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று மற்றொரு நிபுணர் தெரிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டு வட இந்தியாவில் வெள்ள பேரழிவு ஏற்பட்டது. உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 5,748 பேர் பலியானார்கள். 4,500 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமானது.
உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் அருகே உள்ள ஏரியில் பனிக்கட்டி உறைந்து ஏற்பட்ட வெடிப்பால் இந்த வெள்ள பேரழிவு ஏற்பட்டது.
2013-ம் ஆண்டு உருவானது போல் தற்போதும் கேதர்நாத் கோவில் அருகே இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரி பனிக்கட்டியால் உறைந்து வருகிறது.
இதனால் மீண்டும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ள அபாயம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
டேராடூனில் உள்ள வாடியா இன்ஸ்டிடியூட் அமைப்பு பனிக்கட்டி உறைந்த சில படங்களை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள நிபுணர்கள் அடுத்த வாரம் அந்த இடத்தை சென்று பார்வையிடுகிறார்கள். இதை கேதர்நாத் பகுதியில் உள்ள ருத்ராபிரயாக் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் தற்போது கேதர்நாத் ஏரியில் உருவாகி இருக்கும் பனிக்கட்டி உறைவால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று மற்றொரு நிபுணர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X