search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்
    X

    லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்

    லாலு மகன் தேஜஸ்வி யாதவ்வை யாரேனும் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு வழங்கப்படும் என முசாபார்பூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. மூளை காய்ச்சலுக்கு இதுவரை 128 குழந்தைகள் பலியாகியுள்ளன. 

    நாடு முழுவதும் இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விவகாரம் குறித்து பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.  



    இந்நிலையில்,  முசாபர்பூரில் தேஜஸ்வி யாதவ்வை யாரேனும் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு வழங்கப்படும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
    Next Story
    ×