search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமாச்சல் பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு - விசாரணை நடத்த முதல் மந்திரி உத்தரவு
    X

    இமாச்சல் பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு - விசாரணை நடத்த முதல் மந்திரி உத்தரவு

    இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்ஜார் பகுதியிலிருந்து 50க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கடகுஷானி என்ற இடத்திற்கு தனியாருக்கு சொந்தமான பஸ் நேற்று சென்றது.

    பஞ்ஜார் பகுதியில் உள்ள மலைப்பாங்கான கோர்ச் என்ற பகுதியை கடக்கும்போது எதிர்பாராத விதமாக பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்தது. இதையடுத்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விழுந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 33 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.



    இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர், விபத்து நடந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×