என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய எம்.பி.பிரக்யா சிங்கின் மனு நிராகரிப்பு
Byமாலை மலர்20 Jun 2019 9:52 AM GMT (Updated: 20 Jun 2019 9:52 AM GMT)
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரிய பிரக்யாவின் மனுவை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து, விலக்களிக்க வேண்டும் என்ற பிரக்யா சிங்கின் கோரிக்கையை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் நிராகரித்தது.
வழக்கு விசாரணைக்காக என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் முதன்முறையாக கடந்த 7-ம் தேதி ஆஜரானார். 11 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணைக்கு பிரக்யா சிங் இதுவரை ஒருமுறை மட்டுமே ஆஜராகியுள்ளார்.
இதனிடையே, நீதிமன்றத்தில் வாரம் ஒருமுறை ஆஜராக விலக்கு கோரி பிரக்யா மனுதாக்கல் செய்திருந்தார். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், வாரம் ஒருமுறை ஆஜராக விலக்களிக்க கோரிய பிரக்யாவின் மனுவை மும்பையில் உள்ள என்.ஐ.ஏ.நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X