என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூகுள் மேப்பில் தெரியும் புகழ்மிக்க இந்திய பேரரசரின் பிரம்மாண்ட ரங்கோலி வைரல்
Byமாலை மலர்20 Jun 2019 5:48 AM GMT (Updated: 20 Jun 2019 5:48 AM GMT)
கூகுள் மேப் செயலியில் இந்தியாவைச் சேர்ந்த புகழ்மிக்க பேரரசரின் பிரம்மாண்டமான ரங்கோலி தெரிந்துள்ளது. இப்போது வைரலாகி வருகிறது.
லத்தூர்:
மகாராஷ்டிரா மாநிலத்தின் லத்தூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி பேரரசர் சத்ரபதி சிவாஜி ஜெயந்தியையொட்டி சிறப்பு ஏற்பாடுகள், கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
லத்தூரில் உள்ள நிலங்கா எனும் கிராமத்தில் சத்ரபதி சிவாஜியின் தோற்றம் ரங்கோலி ஓவியமாக தீட்ட திட்டமிடப்பட்டது. இதனையடுத்து இக்கிராமத்தில் 2.4 லட்சம் சதுர அடி அளவில் 6 ஏக்கர் பரப்பளவில் ரங்கோலி போட ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ரங்கோலியினை கலைஞர் மங்கேஷ் நிபானிகர் என்பவர் தீட்டியிருந்தார். பிப்ரவரி மாதம் போடப்பட்ட இந்த ரங்கோலி, 3 மாதங்கள் கடந்தும், இப்போது தேடினாலும் கூகுள் மேப்பில் பிரம்மாண்டமாக தெரிகிறது.
இது தொடர்பாக கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரங்கோலி கலைஞர் மங்கேஷ் கூறுகையில், ‘கடந்த வருடத்தை விட இந்த வருடம் சற்று வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டோம்.
இதனையடுத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் பச்சை நிறத்தில் சிவாஜியை ரங்கோலியில் வரைந்து முடித்தேன். இப்போது வரை நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது’ என கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் லத்தூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி பேரரசர் சத்ரபதி சிவாஜி ஜெயந்தியையொட்டி சிறப்பு ஏற்பாடுகள், கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
லத்தூரில் உள்ள நிலங்கா எனும் கிராமத்தில் சத்ரபதி சிவாஜியின் தோற்றம் ரங்கோலி ஓவியமாக தீட்ட திட்டமிடப்பட்டது. இதனையடுத்து இக்கிராமத்தில் 2.4 லட்சம் சதுர அடி அளவில் 6 ஏக்கர் பரப்பளவில் ரங்கோலி போட ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ரங்கோலியினை கலைஞர் மங்கேஷ் நிபானிகர் என்பவர் தீட்டியிருந்தார். பிப்ரவரி மாதம் போடப்பட்ட இந்த ரங்கோலி, 3 மாதங்கள் கடந்தும், இப்போது தேடினாலும் கூகுள் மேப்பில் பிரம்மாண்டமாக தெரிகிறது.
இந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. மேலும் கூகுளின் சாட்டிலைட் வியூவிற்கு இதனை மாற்றி ‘சத்ரபதி சிவாஜி மகராஜ் கிராஸ் போட்டோ பார்ம்’ என டைப் செய்தால் இந்த ரங்கோலி அச்சு அசலாக அப்படியே தெரிகிறது.
♥️
— Godman Chikna (@Madan_Chikna) June 20, 2019
"People are turning to Google Maps to locate a crop art tribute to Chhatrapati Shivaji Maharaj" https://t.co/cM6oQkHmuG
இது தொடர்பாக கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரங்கோலி கலைஞர் மங்கேஷ் கூறுகையில், ‘கடந்த வருடத்தை விட இந்த வருடம் சற்று வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டோம்.
இதனையடுத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் பச்சை நிறத்தில் சிவாஜியை ரங்கோலியில் வரைந்து முடித்தேன். இப்போது வரை நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது’ என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X