search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து வாலிபர் மீது தாக்குதல் - மத்திய மந்திரி மகன் மீது கொலை முயற்சி வழக்கு
    X

    வீடு புகுந்து வாலிபர் மீது தாக்குதல் - மத்திய மந்திரி மகன் மீது கொலை முயற்சி வழக்கு

    மத்தியபிரதேசத்தில் வாலிபரை வீடு புகுந்து தாக்கியது தொடர்பாக மத்திய மந்திரி மகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    போபால்:

    மத்தியபிரதேசத்தை சேர்ந்த பிரகலாத் பட்டேல். மத்திய மந்திரியாக இருந்து வருகிறார். இவரது சொந்த ஊர் நரசிங்கபூர் மாவட்டம் கொட்டேகான் என்ற இடத்தில் உள்ளது.

    பிரகலாத் பட்டேலின் மகன் பிரபால், அவரது உறவினர் மோனு ஆகியோருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹிமான்ஸ் ரத்தோர், ராகுல்ராஜ்புத் ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

    ஹிமான்ஸ், ராகுல் இருவரும் அருகில் உள்ள கிராமத்தில் நடந்த திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்கள். அப்போது அவர்களை வழிமறித்து பிரபால் மற்றும் மோனு, அவரது நண்பர்கள் தாக்கினார்கள்.

    அதன்பிறகு அங்குள்ள போலீஸ்காரர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து அவரது மகன் சிவராம்ராய் என்பவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது வீட்டில் இருந்த போலீஸ்காரர் மகனை காப்பாற்றுவதற்கு முயற்சித்தார். அவரையும் தாக்கினார்கள்.

    இதுசம்பந்தமாக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பிரபால் மற்றும் அவரது உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது கொலை முயற்சி மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×