என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி பிரச்சினையில் அனைவரும் கூட்டாக போராட வேண்டும்: நடிகை சுமலதா எம்பி
Byமாலை மலர்19 Jun 2019 2:10 AM GMT (Updated: 19 Jun 2019 2:10 AM GMT)
கர்நாடகத்தின் நலனை காக்க காவிரி பிரச்சினையில் அனைவரும் கூட்டாக போராட வேண்டும் என்று நடிகை சுமலதா எம்.பி. கூறினார்.
பெங்களூரு :
நடிகை சுமலதா எம்.பி., டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், வளர்ச்சி பணிகள் மற்றும் காவிரி பிரச்சினை அனைத்தும் மாநில அரசின் கையில் தான் உள்ளது என்றும், இதில் எம்.பி.யின் பங்கு எதுவும் இல்லை என்றும் கூறினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் இந்த கருத்தை சுமலதா டெல்லியில் மறுத்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவிரி பிரச்சினை தற்போது கோர்ட்டில் உள்ளது. அதனால் இதுபற்றி மாநில அரசு சட்ட போராட்டம் நடத்த வேண்டும் என்று சொன்னேன். இதில் எம்.பி.யாக எனது பங்கு இல்லை என்று நான் சொல்லவில்லை. அதிக பொறுப்பு மாநில அரசுக்கு தான் உள்ளது என்று தான் சொன்னேன். ஆனால் எனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டது.
காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் நலனை காக்க எம்.பி.க்கள், மாநில அரசு உள்பட அனைவரும் கூட்டாக போராட வேண்டும். எம்.பி.க்களுக்கு இதில் பங்கு இல்லை என்று கூறி பொறுப்பற்ற முறையில் பேசுபவர் நான் அல்ல. நான் எப்படிப்பட்டவர் என்பது மண்டியா மக்களுக்கு தெரியும்.
எனது கருத்தை தவறாக சித்தரித்து, மக்களை திசை திருப்ப முடியாது. தேர்தலின்போது அவ்வாறு செய்தனர். அந்த நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு சுமலதா கூறினார்.
நடிகை சுமலதா எம்.பி., டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், வளர்ச்சி பணிகள் மற்றும் காவிரி பிரச்சினை அனைத்தும் மாநில அரசின் கையில் தான் உள்ளது என்றும், இதில் எம்.பி.யின் பங்கு எதுவும் இல்லை என்றும் கூறினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் இந்த கருத்தை சுமலதா டெல்லியில் மறுத்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவிரி பிரச்சினை தற்போது கோர்ட்டில் உள்ளது. அதனால் இதுபற்றி மாநில அரசு சட்ட போராட்டம் நடத்த வேண்டும் என்று சொன்னேன். இதில் எம்.பி.யாக எனது பங்கு இல்லை என்று நான் சொல்லவில்லை. அதிக பொறுப்பு மாநில அரசுக்கு தான் உள்ளது என்று தான் சொன்னேன். ஆனால் எனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டது.
காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் நலனை காக்க எம்.பி.க்கள், மாநில அரசு உள்பட அனைவரும் கூட்டாக போராட வேண்டும். எம்.பி.க்களுக்கு இதில் பங்கு இல்லை என்று கூறி பொறுப்பற்ற முறையில் பேசுபவர் நான் அல்ல. நான் எப்படிப்பட்டவர் என்பது மண்டியா மக்களுக்கு தெரியும்.
எனது கருத்தை தவறாக சித்தரித்து, மக்களை திசை திருப்ப முடியாது. தேர்தலின்போது அவ்வாறு செய்தனர். அந்த நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு சுமலதா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X