என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த இளைஞர்
Byமாலை மலர்18 Jun 2019 10:26 AM GMT (Updated: 18 Jun 2019 10:26 AM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான்:
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியினை சார்ந்த 20 வயது நிரம்பிய இளைஞர் நிர்மல் குமாவத். இவர் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நிர்மலுக்கும் அவருடைய காதலிக்கும் இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக சிறிய சண்டை நடந்துள்ளது.
இதனால் மனம் உடைந்த நிர்மல் நேற்று (ஜூன் 17) இரவு சுமார் 2 மணி நேரம் வரை லைவ் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அதில் ‘எனது காதலி எனக்கு துரோகம் செய்து விட்டார், ஆகையால் நான் தற்கொலை செய்யப் போகிறேன்’ என கூறியுள்ளார்.
இது குறித்து தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிர்மல் குமாவத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிர்மலின் உடலினை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இளைஞர் ஒருவர், பேஸ்புக் லைவ் வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியினை சார்ந்த 20 வயது நிரம்பிய இளைஞர் நிர்மல் குமாவத். இவர் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நிர்மலுக்கும் அவருடைய காதலிக்கும் இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக சிறிய சண்டை நடந்துள்ளது.
இதனால் மனம் உடைந்த நிர்மல் நேற்று (ஜூன் 17) இரவு சுமார் 2 மணி நேரம் வரை லைவ் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அதில் ‘எனது காதலி எனக்கு துரோகம் செய்து விட்டார், ஆகையால் நான் தற்கொலை செய்யப் போகிறேன்’ என கூறியுள்ளார்.
ஆனால் அந்த நேரடி வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்த இணைய வாசிகள், தற்கொலையை தடுக்க முயற்சிக்கவில்லை, காவல்துறைக்கும் தகவல் அளிக்கவில்லை. மாறாக, அந்த வீடியோவுக்கு லைக் மற்றும் கமெண்டினை பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது தான் வைத்திருந்த மாத்திரைகளை நிர்மல் சாப்பிட்டுள்ளார். பின்னர் தான் வைத்திருந்த கயிறு மூலம் தனது அறையில் தூக்கிட்டு கொண்டார்.
இது குறித்து தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிர்மல் குமாவத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிர்மலின் உடலினை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இளைஞர் ஒருவர், பேஸ்புக் லைவ் வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X