search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்வாமா தாக்குதலில் காயமடைந்த இரு வீரர்கள் உயிரிழப்பு
    X

    புல்வாமா தாக்குதலில் காயமடைந்த இரு வீரர்கள் உயிரிழப்பு

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையின் ரோந்து வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்த 9 வீரர்களில் இருவர் இன்று உயிரிழந்தனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட அரிஹால்-லஸ்ஸிபோரா சாலை வழியாக பாதுகாப்பு படையினர் இன்று மாலை வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



    ஈட்கா அரிஹால் என்ற இடத்தின் வழியாக வந்தபோது பாதுகாப்பு படை வாகனத்தின் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இரு வீரர்கள் உயிரிழந்தனர்.
    Next Story
    ×