search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதி விபத்து- 6 பேர் பலி
    X

    உ.பி.யில் டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதி விபத்து- 6 பேர் பலி

    உத்தர பிரதேசத்தின் சிதாபூர் மாவட்டத்தில் டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர், 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சிதாபூர்:

    உத்தர பிரதேசத்தின் சிதாபூர் மாவட்டத்தில் உள்ள டல்வாள் கிராமத்தை சேர்ந்த 40 பேர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாரத் மக்ரேஹட்டா பகுதிக்கு டிராக்டரில் நேற்றிரவு சென்று கொண்டிருந்தனர். லாஹிம்புரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த டேங்கர் லாரி டிராக்டரின் பின்னால் மோதியது.



    இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். 
    Next Story
    ×