search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
    X

    காஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்துக்குட்பட்ட பிட்ரூ அக்கிங்கம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாதிகளை வேட்டையாடும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



    பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரு வீரர்கள் காயமடைந்ததாகவும் தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×