என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீர் ஆளுநர் ஆனாரா கிரண்பேடி? அந்த பதிவுகளின் பின்னணி இது தான்
Byமாலை மலர்17 Jun 2019 5:54 AM GMT (Updated: 17 Jun 2019 5:54 AM GMT)
கிரண்பேடி ஜம்மு காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளில் ஒன்றில் கிரண்பேடி ஜம்மு காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே தகவலை குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான பனுபென் பபரியாவும் பகிர்ந்து இருக்கிறார். இத்துடன் இவர் கிரண்பேடிக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் புதிய பதவிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்.
வைரலாகும் பதிவினை ஆய்வுக்கு உட்படுத்தியதில், கிரண்பேடி ஆளுநராக நியமிக்கப்பட்டதாக பரவும் தகவல் பொய் என்பது உறுதியாகி இருக்கிறது. 2016, மே மாதம் முதல் கிரண்பேடி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பணியாற்றி வருகிறார்.
கிரண்பேடி ஆளுநராக நியமிக்கப்பட்டதாக கூறும் பதிவு சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவுகள் உண்மையென நம்பும் நெட்டிசன்கள் கிரண்பேடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி சத்ய பால் மாலிக் தான் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 2018 ஆகஸ்டு முதல் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருக்கிறார். கிரண்பேடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் என பதிவிட்டுள்ளார்.
இதே தகவலை குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான பனுபென் பபரியாவும் பகிர்ந்து இருக்கிறார். இத்துடன் இவர் கிரண்பேடிக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் புதிய பதவிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்.
வைரலாகும் பதிவினை ஆய்வுக்கு உட்படுத்தியதில், கிரண்பேடி ஆளுநராக நியமிக்கப்பட்டதாக பரவும் தகவல் பொய் என்பது உறுதியாகி இருக்கிறது. 2016, மே மாதம் முதல் கிரண்பேடி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பணியாற்றி வருகிறார்.
கிரண்பேடி ஆளுநராக நியமிக்கப்பட்டதாக கூறும் பதிவு சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவுகள் உண்மையென நம்பும் நெட்டிசன்கள் கிரண்பேடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி சத்ய பால் மாலிக் தான் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 2018 ஆகஸ்டு முதல் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருக்கிறார். கிரண்பேடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X