என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உளவுத்துறை எச்சரிக்கை
அயோத்தி:
சிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நாளை செல்கிறார்.
இதேபோல உ.பி. துணை முதல்- மந்திரி கேசவ் மவுரியாவும் இன்று வழிபாடு செய்கிறார், மேலும் ராமஜென்ம பூமி தலைவர் மஹாந்த் நிருத்திய கோபால்தாசின் 81-வது பிறந்த நாள் விழாவும் அயோத்தியில் இன்று கொண்டாட விசுவ இந் பரிஷத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
அயோத்தியில் பஸ்கள், ரெயில்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது.
நேபாளத்தில் இருந்து உத்தரபிரதேசத்தில் ஊடுவி அயோத்தியில் உள்ள அம்பேத்கர் நகர், பைசாபாத், கோரப்பூர் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
இந்த பகுதில் இருந்து தீவிரவாத அமைப்புகளுக்கு வாலிபர்களை ஈடுபடுத்தும் பணியும் நடப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
உளவுதுறையின் எச்சரிக்கையை தொடர்ந்து அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்