search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. பெண் பிரமுகர் சுட்டுக் கொலை
    X

    மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. பெண் பிரமுகர் சுட்டுக் கொலை

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ.க. தொண்டர்கள் இடையே மோதல்கள் வலுத்துவரும் நிலையில் நேற்று ஒரு பா.ஜ.க. பெண் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    பராக்பூர்: 

    மேற்குவங்காளத்தில் பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகியுள்ளது. இதற்கு தீர்வு காண அம்மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி கடந்த புதனன்று அரசியல் கட்சியினரிடம் ஆலோசனை நடத்தினார்.  

    இந்நிலையில், மேற்குவங்காளத்தின் பராக்பூர் மாவட்டத்தில் உள்ள பசீர்கட் பகுதியில் பா.ஜ.க. பெண் பிரமுகர் சரஸ்வதி தாஸ் நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார். நேற்று சந்தையிலிருந்து வீடு திரும்பியபோது மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றியதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.க.வின் இந்த குற்றச்சாட்டை ஆளும் திரிணாமுல் கட்சி மறுத்துள்ளது. 

    சுட்டுக் கொல்லப்பட்ட பா.ஜ.க. பெண் பிரமுகரின் கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர், தனது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக போலீசில் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×