என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க. தேசிய தலைவராக அமித்ஷா தொடருவார் என அறிவிப்பு
Byமாலை மலர்13 Jun 2019 11:56 AM GMT (Updated: 13 Jun 2019 11:56 AM GMT)
பா.ஜ.க.வின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடருவார் என மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் அக்கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில பாஜக தலைவர்களும் பங்கேற்றார்கள். தமிழகம் சார்பில் தமிழிசை மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடந்தது.
அப்போது லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களில் வெற்றி பெற அமித்ஷாவே காரணம் என்பதால் அவரே தலைவராக தொடர வேண்டும் என அனைத்து மாநில தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜ.க.வின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடருவார் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து அமித்ஷாவே தலைவராக இருக்க முடிவு எடுக்கப்பட்டது.
டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் அக்கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில பாஜக தலைவர்களும் பங்கேற்றார்கள். தமிழகம் சார்பில் தமிழிசை மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடந்தது.
அப்போது லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களில் வெற்றி பெற அமித்ஷாவே காரணம் என்பதால் அவரே தலைவராக தொடர வேண்டும் என அனைத்து மாநில தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜ.க.வின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடருவார் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து அமித்ஷாவே தலைவராக இருக்க முடிவு எடுக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X