search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
    X

    மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

    மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷாவுக்கு டெல்லி போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    மீண்டும் அமைந்துள்ள நரேந்திர மோடி அரசில், பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ‌ஷா, மத்திய உள்துறை மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ளார். மந்திரி சபையில் அவர் 3-வது இடம் வகிக்கிறார்.

    மத்திய உள்துறை மந்திரி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பதவி என்பதால், அமித் ‌ஷாவின் பாதுகாப்பு குறித்து டெல்லி போலீசார் ஆய்வு செய்தனர். அதையடுத்து, அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி, டெல்லியில் உள்ள அமித் ‌ஷா வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு படையினரை டெல்லி போலீஸ் அனுப்பி வைத்துள்ளது.

    அமித் ‌ஷா, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. துணை ராணுவப்படையினர் இந்த பாதுகாப்பை அளித்து வருகிறார்கள். அவருக்கு தேசிய பாதுகாப்பு படையின் கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, தற்போதைய வீட்டில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த வீட்டுக்கு அமித் ‌ஷா மாற உள்ளார்.

    இதற்கிடையே, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு அளித்து வருகிறது. விரைவில், இந்த பாதுகாப்பு பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது.
    Next Story
    ×