என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Byமாலை மலர்7 Jun 2019 8:29 PM GMT (Updated: 7 Jun 2019 8:29 PM GMT)
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு டெல்லி போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
புதுடெல்லி:
மீண்டும் அமைந்துள்ள நரேந்திர மோடி அரசில், பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ளார். மந்திரி சபையில் அவர் 3-வது இடம் வகிக்கிறார்.
மத்திய உள்துறை மந்திரி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பதவி என்பதால், அமித் ஷாவின் பாதுகாப்பு குறித்து டெல்லி போலீசார் ஆய்வு செய்தனர். அதையடுத்து, அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, டெல்லியில் உள்ள அமித் ஷா வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு படையினரை டெல்லி போலீஸ் அனுப்பி வைத்துள்ளது.
அமித் ஷா, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. துணை ராணுவப்படையினர் இந்த பாதுகாப்பை அளித்து வருகிறார்கள். அவருக்கு தேசிய பாதுகாப்பு படையின் கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, தற்போதைய வீட்டில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த வீட்டுக்கு அமித் ஷா மாற உள்ளார்.
இதற்கிடையே, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு அளித்து வருகிறது. விரைவில், இந்த பாதுகாப்பு பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது.
மீண்டும் அமைந்துள்ள நரேந்திர மோடி அரசில், பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ளார். மந்திரி சபையில் அவர் 3-வது இடம் வகிக்கிறார்.
மத்திய உள்துறை மந்திரி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பதவி என்பதால், அமித் ஷாவின் பாதுகாப்பு குறித்து டெல்லி போலீசார் ஆய்வு செய்தனர். அதையடுத்து, அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, டெல்லியில் உள்ள அமித் ஷா வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு படையினரை டெல்லி போலீஸ் அனுப்பி வைத்துள்ளது.
அமித் ஷா, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. துணை ராணுவப்படையினர் இந்த பாதுகாப்பை அளித்து வருகிறார்கள். அவருக்கு தேசிய பாதுகாப்பு படையின் கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, தற்போதைய வீட்டில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த வீட்டுக்கு அமித் ஷா மாற உள்ளார்.
இதற்கிடையே, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு அளித்து வருகிறது. விரைவில், இந்த பாதுகாப்பு பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X