என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை - ஓவைசி
Byமாலை மலர்1 Jun 2019 6:16 AM GMT (Updated: 1 Jun 2019 6:16 AM GMT)
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் வந்துவிட்டதால் முஸ்லிம்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:
பாராளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்ற பா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி வந்துவிட்டதால் முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் மக்களவை தொகுதியில் தொடர்ந்து 4வது முறை வெற்றி பெற்று ஓவைசி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மோடியால் கோவிலுக்கு சென்று வழிபட முடியுமென்றால், நாமும் நம்முடைய மசூதிகளுக்கு செல்லலாம். மோடியால் குகைக்குள் போய் அமர முடியுமென்றால், முஸ்லிம்களாகிய நாம், பெருமையுடன் மசூதிகளில் தொழுகை நடத்தலாம். 300 இடங்களில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விவகாரம் இல்லை. ஏனெனில், இந்தியா அரசியலமைப்பில் வாழ்கிறது. 300 தொகுதிகளில் வென்று விட்டதால் மட்டுமே அவர்களால் (பா.ஜ.க.) நமது உரிமைகளை பறித்துவிட முடியாது என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X