search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை - ஓவைசி
    X

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை - ஓவைசி

    மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் வந்துவிட்டதால் முஸ்லிம்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்ற பா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  

    இந்நிலையில், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி வந்துவிட்டதால் முஸ்லிம்கள் கவலைப்பட தேவையில்லை என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

    ஐதராபாத் மக்களவை தொகுதியில் தொடர்ந்து 4வது முறை வெற்றி பெற்று ஓவைசி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:



    மோடியால் கோவிலுக்கு சென்று வழிபட முடியுமென்றால், நாமும் நம்முடைய மசூதிகளுக்கு செல்லலாம். மோடியால் குகைக்குள் போய் அமர முடியுமென்றால், முஸ்லிம்களாகிய நாம், பெருமையுடன் மசூதிகளில் தொழுகை நடத்தலாம். 300 இடங்களில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விவகாரம் இல்லை. ஏனெனில், இந்தியா அரசியலமைப்பில் வாழ்கிறது.  300 தொகுதிகளில் வென்று விட்டதால் மட்டுமே அவர்களால் (பா.ஜ.க.) நமது உரிமைகளை பறித்துவிட முடியாது என தெரிவித்தார்.
    Next Story
    ×