search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 ஆண்டுகளில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு டூர் தான் சென்றார் - கெஜ்ரிவால் பதிலடி
    X

    5 ஆண்டுகளில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு டூர் தான் சென்றார் - கெஜ்ரிவால் பதிலடி

    ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியின் உரைக்கு, 5 ஆண்டுகளில் பிரதமர் வெளிநாடுகளுக்கு டூர் தான் சென்றார் என பதிலடி கொடுத்துள்ளார். #AravindKejriwal #PMModi
    புது டெல்லி:

    இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் புது டெல்லியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பிரசாரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,  ‘டெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மியின் ஆட்சி செயல் திறனற்று இருக்கிறது. மேலும் கெஜ்ரிவால் ஆட்சியில் சிறந்த செயல்கள் ஏதும் செய்யவில்லை. அங்கு ஒர் அராஜக ஆட்சி நடைபெறுகிறது’ என கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டிருப்பதாவது:



    பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு டூர் செல்வது, கருத்து சொல்வது போன்ற பணிகளில் தான் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதை தவிர எவ்வித பணிகளும் செய்து முடிக்கவில்லை. இதன் காரணமாகவே பொய்யாக தேசியவாதம் எனும் பெயரில் வாக்கு சேகரித்து வருகிறார்.   

    நீங்கள் பதிலே சொல்லமுடியாத மூன்று முக்கிய கேள்விகளை டெல்லி மக்கள் கேட்கிறார்கள்.

    முதல் கேள்வி: டெல்லி சரியாக இயங்கவில்லை என்றால் ஏன் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை?

    இரண்டாவது கேள்வி: 2014ல் பாஜக, டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்குவோம் என கூறியது.  ஏன் வழங்கவில்லை?

    மூன்றாவது கேள்வி: இம்ரான் கான் ஏன் மோடியை ஆதரிக்க வேண்டும்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். #AravindKejriwal #PMModi

    Next Story
    ×