search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்வார் துறைமுகம் அருகே ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர் கப்பலில் திடீர் தீ - கடற்படை அதிகாரி பலி
    X

    கார்வார் துறைமுகம் அருகே ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர் கப்பலில் திடீர் தீ - கடற்படை அதிகாரி பலி

    இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா’ விமானம்தாங்கி போர் கப்பலில் இன்று ஏற்பட்ட தீயை அணைக்கப் போராடிய லெப்டினன்ட் கமாண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். #KarwarHarbour #FireOnboardVikramaditya #INSVikramaditya
    பெங்களூரு:

    இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா’ விமானம்தாங்கி போர் கப்பல் இன்று பிற்பகல் கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் துறைமுகத்துக்குள் நுழைந்தபோது திடீரென்று கப்பலின் ஒரு பகுதியில் தீப்பற்றியது.



    அங்கிருந்த உபகரணங்களை வைத்து தீயை போராடி அணைத்தவர்களில் ஒருவரான லெப்டினன்ட்  கமாண்டர்  டி.எஸ்.சவுகான் பலத்த தீக்காயங்களுடன் அருகாமையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு இந்திய கடற்படை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். #KarwarHarbour #FireOnboardVikramaditya #INSVikramaditya 
    Next Story
    ×