search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ வீரர்களின் பெயரால் ஓட்டு கேட்பதற்கு மோடி வெட்கப்பட வேண்டும் - மம்தா தாக்கு
    X

    ராணுவ வீரர்களின் பெயரால் ஓட்டு கேட்பதற்கு மோடி வெட்கப்பட வேண்டும் - மம்தா தாக்கு

    ராணுவ வீரர்கள் மற்றும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் பெயரால் ஓட்டு கேட்பதற்கு பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #Modiashamed #votesinname #nameofsoldiers #Mamata
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காளம் மாநிலம், உட்டர் தினஜ்பூர் மாவட்டம், இஸ்லாம்பூர் பகுதியில் அம்மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று தனது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தார்.

    கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் ராமர் கோவிலை கட்டாத பாஜக அரசு ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் அயோத்தி பிரச்சனையை மையமாக வைத்து மக்களை முட்டாள்களாக்க முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

    இப்போது ராணுவ வீரர்கள் மற்றும் நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளை சொந்தம் கொண்டாடி வரும் மோடி அவர்களின் பெயரால் மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார். இதற்காக அவர் வெட்கப்பட வேண்டும்.

    நமது நாட்டு முப்படையினர் நம் அனைவருக்குமே சொந்தமானவர்கள். அவர்களால் நமக்கு பெருமை, பெருமிதம். ராணுவ வீரர்கள் அனைவருமே தனக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோல் பேசிவரும் மோடி, போதுமான உளவுத்துறை தகவல் இருந்தும், எச்சரிக்கை விடுக்கப்பட்டும் புல்வாமா தாக்குதலில் இருந்து நமது வீரர்களை பாதுகாக்க தவறியது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் மம்தா வலியுறுத்தினார். #Modiashamed #votesinname #nameofsoldiers #Mamata
    Next Story
    ×