search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி வீட்டில் தமிழக காங். தலைவர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு
    X

    ராகுல்காந்தி வீட்டில் தமிழக காங். தலைவர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு

    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வீட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட முக்கிய தலைவர்கள் தி.மு.க. கூட்டணி தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினர். #DMKCongressAlliance #Congress #RahulGandhi #DMK
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது.

    இதற்கிடையே, கூட்டணி தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். ராகுல்காந்தி வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஆலோசனையின் நிறைவில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அவர்களுடன் யார் சேர்ந்தாலும் அவர்களும் மூழ்குவார்கள் என தெரிவித்தார்.



    இதுதொடர்பாக, திருநாவுக்கரசர் கூறுகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல், அவர்களுடன் யார் சேர்ந்தாலும் அவர்களும் மூழ்குவார்கள். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை.

    பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எந்த நலன் கருதி சேர்ந்தாலும் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணி என்பது கட்டாய கல்யாணம்.

    தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு முடியும் நிலையில் வந்துவிட்டது; காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்குவது பற்றி இன்றோ அல்லது நாளையோ அறிவிப்பு வெளியிடப்படும்.

    தேர்தல் பரப்புரைக்கு பிரியங்கா காந்தி தமிழகத்துக்கு வருவார். தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட்டு தேர்தல் பணியாற்ற ராகுல்காந்தி அறிவுறுத்தினார் என தெரிவித்துள்ளார். #DMKCongressAlliance #Congress #RahulGandhi #DMK
    Next Story
    ×