search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல்
    X

    டெல்லியில் 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல்

    தலைநகர் டெல்லியில் 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. #Delhi #SwineFlue
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 7-ந்தேதி வரை 1,196 பேருக்கு இந்த நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இது 1,965 பேராக உயர்ந்து உள்ளது.

    இந்த ஆண்டு மட்டும் 6 பேர் பன்றி காய்ச்சல் நோயால் உயிரிழந்திருப்பதாக மாநில சுகாதார பணிகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. ஆனால் மத்திய அரசின் 2 மருத்துவமனைகளிலேயே 13 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே டெல்லிவாசிகள் பீதியில் உறைந்துள்ளன.
    Next Story
    ×