என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு
Byமாலை மலர்18 Feb 2019 1:29 PM GMT (Updated: 18 Feb 2019 1:29 PM GMT)
மத்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டில் முடிவடைந்த இரண்டாம் அரை நிதியாண்டு நிலவரப்படி தன்னிடம் உள்ள உபரி தொகையான 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க தீர்மானித்துள்ளது. #RBIboard #RBIinterimsurplus #RBIsurplus
மும்பை:
மத்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித் தொகையை அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகத்துக்கும் இடையே கடந்த ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தனது வருவாயில் 75 சதவீதம் தொகையை அரசுக்கு அளித்திருந்தது. இப்படி அளிக்கப்பட்ட மொத்த தொகை சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாயாகும்.
இருப்பினும், இன்னும் கூடுதலாக நிதியை அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியை மத்திய அரசு நிர்பந்தித்து வருவதாக கடந்த ஆண்டின் இறுதியில் தகவல் வெளியானது. இதை மத்திய நிதித்துறை அமைச்சகம் மறுத்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டில் முடிவடைந்த இரண்டாம் அரை நிதியாண்டு நிலவரப்படி தன்னிடம் உள்ள தொகையில் 28 ஆயிரம் கோடி ரூபாயை இடைக்கால உபரி தொகையான மத்திய அரசிடம் அளிக்க மத்திய ரிசர்வ் வங்கி இயக்குனரகம் (RBI board) இன்று தீர்மானித்துள்ளது. #RBIboard #RBIinterimsurplus #RBIsurplus
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X