என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பையில் ரூ.39 கோடி போதைப்பொருள் பறிமுதல்
Byமாலை மலர்10 Feb 2019 11:10 PM GMT (Updated: 10 Feb 2019 11:10 PM GMT)
மும்பையில் வெளிநாட்டிற்கு கூரியர் நிறுவனத்தின் மூலம் ரூ.39 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த உள்ளதாக வந்த தகவலின் பேரில் வெளிநாட்டை சேர்ந்த 4 பேர் போலீசார் கைது செய்தனர். #Mumbai #DrugSmuggling
மும்பை:
மும்பை அந்தேரி பகுதியில் வெளிநாட்டிற்கு கூரியர் நிறுவனத்தின் மூலம் போதைப்பொருள் கடத்த உள்ளதாக வந்த தகவலின் பேரில் போலீசார், அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பெரிய பார்சலுடன் நடந்து சென்ற வெளிநாட்டை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதை பிரித்து சோதனையிட்டபோது, ஜன்னலுக்கு பயன்படுத்தும் திரைச்சீலைகள் இருந்தன. அவற்றில் பெரிய வளையங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த வளையங்களை உடைத்து பார்த்தபோது அதில் 6 கிலோ 492 கிராம் எடையுள்ள ‘கோகைன்’ போதைப்பொருள் மறைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கூரியர் மூலம் வெளிநாட்டுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் கார்ல பிண்டே (வயது 35), நைஜீரியாவை சேர்ந்த நீரஸ் ஒகோவா (35), சைமன் (32), மைக்கேல் ஓவ் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.38 கோடியே 95 லட்சம் என அவர்கள் தெரிவித்தனர்.
மும்பை அந்தேரி பகுதியில் வெளிநாட்டிற்கு கூரியர் நிறுவனத்தின் மூலம் போதைப்பொருள் கடத்த உள்ளதாக வந்த தகவலின் பேரில் போலீசார், அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பெரிய பார்சலுடன் நடந்து சென்ற வெளிநாட்டை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதை பிரித்து சோதனையிட்டபோது, ஜன்னலுக்கு பயன்படுத்தும் திரைச்சீலைகள் இருந்தன. அவற்றில் பெரிய வளையங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த வளையங்களை உடைத்து பார்த்தபோது அதில் 6 கிலோ 492 கிராம் எடையுள்ள ‘கோகைன்’ போதைப்பொருள் மறைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கூரியர் மூலம் வெளிநாட்டுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் கார்ல பிண்டே (வயது 35), நைஜீரியாவை சேர்ந்த நீரஸ் ஒகோவா (35), சைமன் (32), மைக்கேல் ஓவ் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.38 கோடியே 95 லட்சம் என அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X