search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியானாவில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
    X

    அரியானாவில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

    அரியானாவில் உள்ள குருகிராமம் பகுதியில் இருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #gurugram #fourstoreybuildingaccident
    குருகிராமம்:

    அரியானாவில் உள்ள குருகிராமம் பகுதியை சார்ந்த உல்லவாஸ் கிராமத்தில் நான்கு மாடி கட்டிடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    எந்தவொரு முறையான தொழில்நுட்பத்துடனும் இல்லாமல் ஒரு ஒழுங்கற்ற முறையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக குருகிராமம் சப்-கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கட்டிடத்தின் நான்காவது தளம் நேற்று தான் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    கட்டிடத்தின் உரிமையாளர் கண்டறியப்பட்டதாகவும், அவர் பெயர் தயாராம் எனவும் குருகிராமம் துணை ஆணையர் வினய் பிரதாப் சிங் கூறியுள்ளார். இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை சரியாக தெரியாத நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மூன்று குழுக்களாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். #gurugram #fourstoreybuildingaccident

    Next Story
    ×