search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந்தேதி தொடங்குகிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்
    X

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந்தேதி தொடங்குகிறது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி)13-ந்தேதி வரை நடைபெறுகிறது. #BudgetSession #Parliament
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி)13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 31-ந்தேதி காலை 11 மணி அளவில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் உரையாற்றுகிறார்.

    பிப்ரவரி 1-ந்தேதி இந்த ஆண்டுக்கான (2019-2020) இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் பிரதமர் நரேந்திரமோடியின் 5 ஆண்டு கால ஆட்சியின் கடைசி பட்ஜெட் ஆகும். மேலும் இந்த பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரும் இதுவாகும். #BudgetSession #Parliament 
    Next Story
    ×