search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு - குஜராத்தில் நாளை முதல் அமல்
    X

    மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு - குஜராத்தில் நாளை முதல் அமல்

    ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்ட வடிவம் பெற்றுள்ள வருமானத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் என முதல் மந்திரி விஜய் ருபானி அறிவித்துள்ளார். #RamnathKovind #10pcreservation
    அகமதாபாத்:

    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா சமீபத்தில் நிறைவேறியது.

    ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார். இதைதொடர்ந்து, அவரது ஓப்புதலுடன் இதற்கான இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கையும் (Gazette Notification) வெளியானது. இதன்மூலம் நாடு முழுவதும் நேற்றிலிருந்து இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.


    இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல் மந்திரி விஜய் ருபானி இன்று அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்த சட்டத்தை முதன்முதலாக நடைமுறைப்படுத்தும் மாநிலமாக குஜராத் சிறப்பிடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.   #VijayRupani #Gujaratgovernment #10pcreservation
    Next Story
    ×