search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயாவதி பிரதமராக ஆதரவு அளிப்போம்- அகிலேஷ் யாதவ்
    X

    மாயாவதி பிரதமராக ஆதரவு அளிப்போம்- அகிலேஷ் யாதவ்

    உத்தரபிரதேசத்தில இருந்து மாயாவதி பிரதமர் ஆவதற்கு ஆதவு அளிப்போம் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். #AkileshYadav #Mayawati
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் கூட்டாக வெளியிட்டனர்.

    இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் தலா 38 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

    தேர்தலுக்கு பிறகு மாயாவதி பிரதமராக ஆதரவு கொடுப்பீர்களா? என்று அகிலேஷ் யாதவிடம் கேட்டபோது கூறியதாவது:-

    உத்தரபிரதேசம் பல பிரதமர்களை நாட்டிற்கு அளித்துள்ளது. எனவே உத்தரபிரதேசத்தில் இருந்து மீண்டும் ஒருவர் (மாயாவதி) பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளிப்போம்.

    தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். இதேபோல ராஷ்டிரிய லோக் தளத்துக்கான தொகுதி பங்கீடு குறித்தும் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AkileshYadav #Mayawati
    Next Story
    ×