search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ப.சிதம்பரம்
    X

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ப.சிதம்பரம்

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். #INXMediaCase #PChidambaram
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜரானார். அப்போது, அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ப.சிதம்பரத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    இதேபோல் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலும் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை ஜனவரி 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #INXMediaCase #PChidambaram
    Next Story
    ×