search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் ஆளுநருடன் அசோக் கெலாட், சச்சின் பைலட் சந்திப்பு - ஆட்சியமைக்க உரிமை கோரினர்
    X

    ராஜஸ்தான் ஆளுநருடன் அசோக் கெலாட், சச்சின் பைலட் சந்திப்பு - ஆட்சியமைக்க உரிமை கோரினர்

    ராஜஸ்தானில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, அம்மாநில ஆளுநர் கல்யாண் சிங்கை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியது. #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இறுதியில் 199 தொகுதிகளில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. 

    காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர். அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியையும் சந்தித்தனர்.



    ராஜஸ்தானில் முதல் மந்திரியாக யாரை நியமித்தாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட்டையும், துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட்டையும் தேர்வு செய்தனர்.

    இதையடுத்து, முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட அசோக் கெலாட் மற்றும் துணை முதல் மந்திரியாக தேர்வான சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்க ஆளுநர் கல்யாண் சிங்கை சந்தித்து உரிமை கோரினர்.

    டிசம்பர் 17ம் தேதி அசோக் கெலாட் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot #SachinPilot
    Next Story
    ×