என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெல்காம் பகுதியில் ஜீப்-டிராக்டர் மோதி 6 பெண்கள் பலி
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் சவுகத்தி பகுதியை சேர்ந்த 14 பேர் கோகாத் பகுதிக்கு ஜீப்பில் வந்தனர். அங்கு அவர்கள் தங்களது உறவினர் ஒருவருக்கு இறுதி சடங்கு காரியம் செய்துவிட்டு மீண்டும் ஜீப்பில் ஊருக்கு திரும்பினர்.
அப்போது ஹீரேனந்தி பகுதி அருகே வந்தபோது கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று எதிரே வந்து மோதியது.
இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயம் அடைந்தவர்களை கோகாத் மற்றும் பெல்காம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோகாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 6 பெண்களின் உடல்களை கைப்பற்றி கோகாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்