search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தீபாவளி நாளில் 300 இடங்களில் தீ விபத்து - 2 குழந்தைகள் உயிரிழப்பு
    X

    டெல்லியில் தீபாவளி நாளில் 300 இடங்களில் தீ விபத்து - 2 குழந்தைகள் உயிரிழப்பு

    புதுடெல்லியில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறைக்கு 300-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Diwali #DelhiFireCalls
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. பட்டாசு வெடிக்கும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும், தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    அதன்படி தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பட்டாசு விபத்து, வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு ஏராளமான அழைப்புகள் சென்றுள்ளன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தினர்.



    இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு வரை தீ விபத்து தொடர்பாக 271 அழைப்புகளும், அதன்பின்னர் இன்று காலை 8 மணி வரை 74 அழைப்புகளும் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீ விபத்து குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சதார் பஜார் குடிசைப்பகுதியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரி கூறினார். #Diwali #DelhiFireCalls
    Next Story
    ×