search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹிட்லர் ஜெர்மனிக்கு செய்ததை மோடி இந்தியாவுக்கு செய்ய நினைக்கிறார் - காங்கிரஸ் தாக்கு
    X

    ஹிட்லர் ஜெர்மனிக்கு செய்ததை மோடி இந்தியாவுக்கு செய்ய நினைக்கிறார் - காங்கிரஸ் தாக்கு

    ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் அந்நாட்டுக்கு செய்ததை இந்தியாவுக்கு பிரதமர் மோடி செய்ய நினைப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குறிப்பிட்டுள்ளார். #Hitler #Modi #HitlerdidtoGermany #MallikarjunKharge
    மும்பை:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே மும்பையின் பண்ட்ரா பகுதியில் இன்று நடைபெற்ற அக்கட்சி நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றுப் பேசினார்.

    மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு இந்த நாட்டை சீரழித்து வருவதாக குறிப்பிட்ட அவர், நாட்டில் உள்ள அமைப்புகளை அழித்து வந்ததைப்போல் இந்தியாவின் அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் மோடியின் எண்ணத்துக்கு காங்கிரஸ் இடமளிக்காது என்று கூறினார்.

    இந்திய அரசியலமைப்பு என்பது இரு குறிப்பிட்ட மதம், சாதி, சமூகத்தினருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றது. 

    இவர்களின் நான்காண்டு ஆட்சியில் சரியான பாதையில் 4 அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சி கடந்த 70 ஆண்டுகளாக என்ன செய்தது? என்று கேள்வி கேட்கும் உரிமை இவர்களுக்கு இல்லை.

    தொடர்ந்து ஊடகங்களை நசுக்குவதால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பேச்சுரிமையும், கருத்துரிமையும் அழிக்கப்பட்டது. நாட்டில் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர பா.ஜ.க. முயற்சிக்கிறது. 

    ஜெர்மனியின் சர்வாதிகாரி அந்நாட்டுக்கு என்ன செய்தாரோ, அதை இந்தியாவுக்கு செய்ய வேண்டும் என மோடி நினைக்கிறார். தற்போது அரசியலமைப்பு சட்டம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. அதை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும் எனவும் மல்லிகார்ஜுனா கார்கே வலியுறுத்தினார். #Hitler #Modi  #HitlerdidtoGermany #MallikarjunKharge
    Next Story
    ×