search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவம்பர் 29-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு- டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
    X

    நவம்பர் 29-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு- டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

    ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் ப.சிதம்பரத்தை நவம்பர் 27-ந் தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #inxmediacase

    புதுடெல்லி:

    காங்கிரசின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திசிதம்பரம் ஆகியோரது பெயர் இடம் பெற்றிருந்தது.

    இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். பலமுறை அவரது கைதுக்கு தடை நீட்டிக்கப்பட்டது.

    இன்று வரை அவரது கைதுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரத்தை நவம்பர் 27-ந் தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து நீதிபதி முப்தா குப்தா உத்தரவிட்டார். #PChidambaram #inxmediacase

    Next Story
    ×