search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூய்மை இந்தியா சின்னம், தேசிய கொடி ரெயில் பெட்டிகளில் வரையப்படும் - ரெயில்வே வாரியம் தகவல்
    X

    தூய்மை இந்தியா சின்னம், தேசிய கொடி ரெயில் பெட்டிகளில் வரையப்படும் - ரெயில்வே வாரியம் தகவல்

    மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து ரெயில் பெட்டிகளிலும் தூய்மை இந்தியா சின்னத்துடன், இந்திய தேசிய கொடியை வரைய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது. #MahatmaGandhi #IndianRailway #SwachchBharat
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் அனைத்து அரசு துறைகளும் கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள தூதரக அலுவலகங்களிலும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாட கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    அதன்படி இந்திய ரெயில்வே துறை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாட இருக்கிறது. அந்த வகையில் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் தூய்மை இந்தியா சின்னத்துடன், இந்திய தேசிய கொடியை வரைய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.



    மேலும் டெல்லி, மும்பை, லக்னோ, சூரத், பெங்களூரு உள்ளிட்ட 43 ரெயில் நிலையங்களில் அக்டோபர் முதல் அடுத்த 6 மாதங்களுக்கு ஒவ்வொரு தலைப்பிலும் வாசகங்கள் இடம் பெறவும், பூரி, அமிர்தசரஸ் ஹரித்துவார் உள்ளிட்ட 28 ரெயில் நிலையங்களை மிகவும் தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தி உள்ளது. சுகாதாரம், அமைதி, தன்னார்வ சமூக சேவை, இன ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகிய தலைப்புகளில் வாசகங்கள் 43 ரெயில் நிலைங்களில் இடம் பெற இருக்கின்றன.  #MahatmaGandhi #IndianRailway #SwachchBharat
    Next Story
    ×